Skip to main content

கையாலாகாத காவல்துறையை கண்டித்து போராட்டம்: கே.பாலகிருஷ்ணன் 

Published on 22/02/2018 | Edited on 22/02/2018


 

K Balakrishnan



தூத்துக்குடியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 மாநில மாநாட்டில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக இருந்த கே.பாலகிருஷ்ணன் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டு முதல் முறையாக பிறந்த ஊரான சிதம்பரத்திற்கு புதன்கிழமை இரவு வருகை தந்தார். இவரை மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர்கள் மேளதாள முழங்க வெடிவெடித்து வரவேற்ப்பு அளித்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து சென்றனர். இதனைதொடர்ந்து அவர் சிதம்பரம் நகரில் உள்ள அம்பேத்கார், பெரியார், சாமி சகஜானந்தா ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினார்.
 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பிஜேபியின் மதவெறி மேலொங்கியுள்ளது. ஆளுநரை கொண்டு போட்டி அரசாங்கத்தை பா.ஜ.க. நடத்தி தமிழகத்தில் வருகிறது. இதை தட்டி கேட்க திராணியல்லாத அரசாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு உள்ளது. மேலும் அதிமுக அரசு பாஜகவின் கூர் முனையாக உள்ளது. மக்களுக்கு விரோதமாக நடைபெறும் திட்டங்களையும், செயல்களையும் கண்டித்து இடதுசாரிகள் மட்டுமல்லாத கருத்தை ஏற்றுகொள்கிறவர்களுடன் இணைந்து மக்கள் நலன் காக்க போராட உள்ளோம். தாய்மொழி தினத்தில் மோடி சமஸ்கிருதத்தை விட தமிழ்மொழிதான் சிறந்த மொழி என்று கூறியுள்ளார். ஆட்சிமொழியாகவும், நீதி மன்றத்தில் வழக்கு மொழியாக தமிழை  ஏற்றுகொள்ளாமல் புறக்கனிக்கபடுகிறது. தமிழ்மொழியில் படித்தால் வேலைகிடைக்காது என்று நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழியின் உரிமையை நிலைநாட்ட தொடர் போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும். மேலும் விவசாயம் அழிவு, கல்வி வியபாரம், தொழிலாளர் பிரச்சனை, பாலின அடக்குமுறை, சாதிய பாகுபாடு உள்ளிட்ட அனைத்து கொடுமைகளையும் எதிர்த்து தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி போராடும்.
 

காவிரி நீர் பிரச்னையில் தமிழகத்தில் அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அதேபோல் மக்கள் நலன் காக்கும் பிரச்சணையிலும் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும். கர்நாட தேர்தல் வர இருப்பதால் மோடி ஓட்டுக்காக காவேரி ஆணையத்தை அமைக்கமாட்டார். கமலும்,ரஜினியும் மக்கள் நலனுக்கு என்ன செய்ய போகிறார்கள். கொள்கைகள் என்ன என்று தெளிவுபடுத்தவில்லை. இருவரும் மதவெறி தூண்டுதல் பற்றியும், சாதிய கொடுமைகள் பற்றியும், ஆணவ கொலைகள், பொருளாதர சீர்கேடு,சாதிமறுப்பு திருமணம்  உள்ளிட்டவைகளுக்கு அவர்களின் நிலைபாடு என்னா என்று தெளிவுபடுத்த வேண்டும் வேண்டுகோள் விடுத்தார்.
 

தமிழகமெங்கும தாலிசெயின் அறுப்பு, கொலை, கொள்ளைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க திராணியில்லாத கையாலாக காவல் துறையினர். தமிழக நலனை கருதில்கொண்டு போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, தூத்துக்குடி மாநாட்டுக்கு அனுமதி பெற்று ஜனநாயக முறையில் பேரணி சென்ற செந்தொண்டர்கள் மீது ஆனியுடன் இருந்த சென்டரிங் பலகையை எடுத்து தாக்குதல் நடத்தியது மிகவும் கண்டனத்திற்குறியது. காவல்துறை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். சமூக விரோதிகள் போல் இருக்ககூடாது. சம்பந்தபட்ட காவல்துறை அதிகாரியை பணிநீக்கம் செய்யக்கோரி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இன்று வியாழக்கிழமை கண்டஆர்பாட்டம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொள்ளவேண்டும் என்றார்.
 

காளிதாஸ்

சார்ந்த செய்திகள்

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.

Next Story

'அம்பேத்கர் பிறந்தநாளில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது பாஜகவின் ஏமாற்று வேலை'-கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'Issuing election manifesto on Ambedkar's birthday is a scam by BJP' K. Balakrishnan review



கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் அம்பேத்கர் புகழ் ஓங்குக என கோஷங்களை எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில்,'' காலங்காலமாக இந்தியாவில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து அனைவரும் சமம் என்கிற ஒரு நிலையை உருவாக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான தலைவர் அம்பேத்கர். மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்கிற உயர்ந்த லட்சியத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த எந்த லட்சியத்திற்காக பாடுபட்டாரோ அதனை நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

அரசியல் சாசனத்தையே அப்புறப்படுத்தி விட்டு வர்ணாசிரம தர்மத்தை அரியணை ஏற்றுவதற்கு துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான கூட்டணி இன்று பகிரங்கமாக வேலை செய்து வருகிறார்கள். அதை வீழ்த்துகிற மகத்தான கூட்டணியாக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் வட இந்தியாவில் உள்ள தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மத்தியிலே ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் என உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில்  பாட்டாளி மக்கள் கட்சி கையை முறுக்கி கடைசி நேரத்தில் கையெழுத்து வாங்கி உடன்பாட்டை ஏற்படுத்தி உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து நான் கேட்பதெல்லாம் இட ஒதுக்கீடு என்ற கொள்கையே இந்த நாட்டில் இருக்கக் கூடாது. சாதி ஏற்றத்தாழ்வுகள் பிரம்மாவால் படைக்கப்பட்டது. வருணாசிர தத்துவம் தான் இந்த ஆட்சியினுடைய தத்துவம் என்று சொல்லக்கூடிய ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.கவோடு இட ஒதுக்கீட்டிற்காக போராடும் நீங்கள் சமூக நீதியை வற்புறுத்துவதற்காக போராடும் நீங்கள் தேர்தல் உறவு கொண்டது இயற்கை நியதிகளுக்கே விரோதமானது இல்லையா?

அம்பேத்கருடைய கொள்கைகளுக்கு சாவுமணி அடிக்கிறவர்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகளை தூக்கி பிடிக்கிறவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் எங்கள் லட்சியம் என்பவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் இந்தியாவின் அரசியல் சாசனமாக மாற்ற வேண்டும் என அறிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை தாங்கக் கூடிய பா.ஜ.க அம்பேத்கர் பிறந்த தினத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதாக கூறுவது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம். சிதம்பரத்தில் திருமாவளவன் மகத்தான வெற்றி பெறுவார்'' எனக் கூறினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணைத்லைவர் மூசா, மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயச்சித்ரா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், ஒன்றிய செயலாளர்கள் மனோகர்,செல்லையா, விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் பால.அறவாழி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.