Skip to main content

பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்-ஓபிஎஸ் மகன் சூளுரை

Published on 19/03/2019 | Edited on 19/03/2019
ops son

ஓ.பி.எஸ். மகன் பயோ-டேட்டா

 

பெயர் : ஓ.பி.ரவீந்திரநாத்குமார்

பிறந்த தேதி : 03.02.1980

தந்தை பெயர் : ஓ.பன்னீர்செல்வம்

முகவரி          : 54, வடக்கு அக்ரஹாரம், தென்கரை,           பெரியகுளம்,

பெரியகுளம் தாலுகா, தேனி மாவட்டம்

கல்வித்தகுதி : BBM, MBA, PGDM.

பதவிகள் : மாவட்ட செயலாளர், தேனி இளைஞர் இளம்பெண்கள் பாசறை 2009 முதல் 2016 வரை

                   தேனி ஜெ.பேரவை மாவட்ட செயலாளர், 2018 முதல் தற்போது வரை

                   தேனி மாவட்ட கோ-கோ கழகம் சங்க தலைவர் கழகத்தில் உறுப்பினராக 

கட்சியில் இணைந்த ஆண்டு : 1998

ஜெ.விடம் நேரில்  உரையாடிய பாக்கியம் :  எனது 13வது வயதில் திண்டுக்கல் அவர்களிடம் நேரில் 

பார்த்து உரையாடினேன்.

 

தேர்தல் பணிகள் : 20 ஆண்டுகளுக்கு மேலாக நேர்மையுடனும், விசுவாசத்துடனும் கட்சிப் பணியை மேற்கொண்டு எனது கடும் உழைப்பால் கட்சிக்கு நற்பெயரை சம்பாதித்ததோடு 2001, 2006, 2011 மற்றும் 2016ம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் 2004, 2009, 2014 பாராளுமன்ற தேர்தலிலும் அந்த காலகட்டங்களில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலிலும் பணியாற்றி உள்ளேன். 12க்கும் மேற்பட்ட தேர்தலில் பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது.

 

 

கழக வளர்ச்சிக்கு எனது செயல்பாடுகள் : 2011ம் ஆண்டில் தலைமை கழகத்தின் அம்மாவின் பொற்கரங்களால் நேரடியாக கட்சி நல நிதியாக 50 லட்சம் நிதி அளித்தது. அப்போது அம்மா எனது செயல்பாடுகளை கேட்டறிந்து என்னை பாராட்டியது என் வாழ்நாளில் மறக்க முடியாது.

 

கழக இளைஞர் இளம்பெணகள் பாசறை தேனி மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கம் மேலான இளைஞர் இளம்பெண்களை புதிய உறுப்பினராக சேர்த்தது.

 

கேரளா மாநிலத்தில் உள்ள பீர்மேடு பகுதியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றி கழகத்திற்கு முதல் வெற்றியை ஈட்டுத் தர கடுமையாக பணியாற்றியது.

 

ops son

 

அம்மா மீதும், கழகத்தின் மீதும் நான் கொண்டிருந்த விசுவாசத்தின் காரணமாகவும், அர்ப்பணி உணர்வுடன் நான் மேற்கொண்ட கடின உழைப்பாலும் தொடர்ந்து நான் ஆற்றி வரும் மக்கள் நல பணிகளிலும், தேனி மாவட்டத்திலும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் நெஞ்சங்களிலும், கழக தொண்டர் உள்ளங்களிலும் இடம்பெற்றுள்ளேன். அதுபோல் கடந்த 21 ஆண்டுகால பொதுவாழ்வில் அம்மா வகுத்து தந்த நல்லொழுக்க பாதையில் கடந்த 21 ஆண்டுகால பொதுவாழ்வில் அதை சீருடன் கடைபிடித்து வருகிறேன். கழகத்திற்கும், கழகத்தின் தலைமைக்கும் மக்கள் ஆதரவு பெருகும் வகையில் கடந்த 21 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான கூட்டங்களை நேரடியாக நடத்தியும் மேற்பார்வை செய்து ஒருங்கமைத்தும் பார்ப்போர் பாராட்டும் வகையில் நடத்தி இருக்கிறேன். அதையடுத்து  கூட்டங்களிலும் தொண்டர்களுடன் உற்சாகத்துடனும், எழுச்சியுடனும், கட்டுங்கடங்காத கூட்டத்தோடும் உற்சாகமான வரவேற்போடு வெற்றிகரமாக நடத்தி இருக்கிறேன். இருபதுக்கும் மேற்பட்ட மாபெரும் பொதுக்கூட்டங்களும், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளேன். மேலும் நூற்றுக்கணக்கான சிறிய அளவிலான கூட்டங்களையும் சீரிய அளவில் நடத்தி இருக்கிறேன். இதுதவிர புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் மற்றும் அம்மா பிறந்தநாள் விழாவை கழக ஆண்டு விழா, வீரவணக்க நாள் போன்ற தலைமை கழகம் அறிவிக்கும் அனைத்து கூட்டங்களிலும் சிறப்பாக நடைபெறுவதற்கு ஆலோசனை வழங்கி எனது பங்களிப்பை சிறப்புடன் நடத்தி காட்டி இருக்கிறேன்.

 

விளையாட்டு மற்றும் சமூக நலன் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியம் மற்றும் நகரங்களிலும் ஆண்டுதோறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி பல்வேறு விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஊக்க பரிசுகள் வழங்கி உள்ளேன். அதுபோல் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி அதன் வாயிலாக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தி கொள்வதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறேன். தேனி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் திறம்பட செயல்பட உறுதுணையாக இருந்து வருகிறேன். அதுபோல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று கழக தொண்டர்களின் குடும்ப நிகழ்ச்சிகளிலும் கட்சி வேறுபாடு பாராமல் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டேன். ஜாதி, மத, இனம் வேறுபாடு பார்க்காமல் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என அனைத்து வழிபாட்டு தளங்களிலும், பிரார்த்தனை நிகழ்ச்கிளிலும் பங்கேற்று இருக்கிறேன். எனது பொதுவாழ்வில் ஆணிவேராக நான் கருதுவது கட்சிக்கும், அதன் தலைமைக்கும் விசுவாசமாக இருந்து கட்சிப் பணியாற்றிவதும், மக்கள் பணியாற்றுவதுமே.

 

 

இந்த பாராளுமன்ற தேர்தலில் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட எனக்கு நல்வாய்ப்பு தந்த அம்மா அவர்களின் ஆசியோடு கழக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணையோடு அம்மாவின் அரசு இதுவரை தமிழக மக்கள் அம்மா அரசு அறிவித்த நலத்திட்டங்களும் இதுவரை தொகுதி மேம்பாட்டுக்கு ஆற்றிய திட்டங்களையும், மக்களிடம் எடுத்துக்கூறி இத்தொகுதியில் போட்டி போடும் நான் பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெறுவேன் என தனது பயோ-டேட்டாவில் ரவீந்திரநாத் கூறி இருக்கிறார்!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.