Skip to main content

உதயநிதி பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய நாகை திமுகவினர்!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

DMK Youth wing Secretary's udhaynithi stalin birthday celebration nagai

 

 

நாகை மாவட்ட தி.மு.க.வினர் எப்போதுமே இல்லாத அளவிற்கு போட்டிப்போட்டுக்கொண்டு இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாடியிருக்கின்றனர்.

 

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.வில் முதல் ஆளாக கடந்த 20ஆம் தேதி திருக்குவளையில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார் உதயநிதி ஸ்டாலின். அவரை பிரச்சாரத்தில் இருக்கும்போதே தொடர்ந்து கைதுசெய்து பரபரக்க செய்தனர் காவல்துறையினர். தி.மு.க. நிர்வாகிகளோ, சாலை மறியல், போராட்டம் என ஆவேசம் காட்டி உதயநிதி ஸ்டாலினின் குட்புக்கில் இடம் பிடிக்கும்படி செய்துகொண்டனர். ஒவ்வொரு நிர்வாகிகளின் திடீர் ஆக்ரோஷத்தைக்கண்ட பலரும் "இதெல்லாம் தேர்தல் படுத்தும் பாடு" என்றனர்.

 

DMK Youth wing Secretary's udhaynithi stalin birthday celebration nagai

 

 

இந்தநிலையில், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளான நவம்பர் 27ஆம் தேதி ஆதரவற்றோர் இல்லத்தில் அறுசுவை உணவு அளிப்பது, ரத்ததான முகாம் நடத்துவது, வேட்டி, புடவை, அரிசி, பருப்பு, காய்கறிகள் வழங்குவது, நிவாரண முகாம்களின் இருப்பவர்களுக்கு உதவுவது என ஜமாய்த்திருக்கின்றனர் நாகை மாவட்ட தி.மு.க.வினர்.

 

அந்த வகையில், வேதாரண்யம் கிழக்கு ஒன்றியம் செயலாளர் என்.சதாசிவம், தனது ஆதரவாளர்களோடு ஆதனூர் ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் மதிய உணவு, வேட்டி, புடவை, கொசுவலை கொடுத்து அசத்தியிருக்கிறார்.

 

DMK Youth wing Secretary's udhaynithi stalin birthday celebration nagai

 

மயிலாடுதுறை வழக்கறிஞர் அணி செயலாளர் ராமசேயோன், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனி அணியை உருவாக்கி நிவாரணம் கொடுத்து வந்தார். உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அறுசுவை உணவு, நிவாரண பொருட்கள், ஆதரவற்றோர் இல்லத்திற்கு உதவி என கொடுத்து கொண்டாடியிருக்கிறார்.

 

உதயநிதி தேர்தல் பிரச்சாரத்திற்கு வத்தபோது ராம.சேயோன் தருமபுரம் ஆதீனத்தின் சன்னிதானத்தை சந்திக்க வைத்து, நீண்ட நேரம் அரசியல் பேச வைத்தார். அப்போது "நிச்சயம் பிரச்சாரம் வெற்றியடையும்" என சன்னிதானம் உதயநிதிக்கு ஆசி வழங்கியது அ.தி.மு.க.வினரையே வியப்படைய செய்தது.

 

DMK Youth wing Secretary's udhaynithi stalin birthday celebration nagai

 

குத்தாலம் தொகுதியை சேர்ந்த மாதிரிமங்கலம் வழக்கறிஞர் புகழரசன், நூற்றுக்கணக்கான தனது ஆதரவாளர்களோடு ரத்ததான முகாம் நடத்தியிருக்கிறார். வழக்கறிஞர் புகழரசன் முன்னாள் தி.மு.க. தலைமை கழக பேச்சாளர்களில் ஒருவரான மாதிரிமங்கலம் கண்ணையனின் மகன் ஆவார். புகழரசனுக்கு கட்சியில் பெரிய அளவில் பொறுப்பு இல்லை என்றாலும் தி.மு.க.வின் பாரம்பரிய குடும்பம் என்பதால் கலைஞர் பெயரில் தி.மு.க.வில் உள்ள வயதானவர்களுக்கு மாதமாதம் 600 ரூபாய் ஒய்வூதியம் வழங்கி வருகிறார். ஸ்டாலின் பெயரில் நலிவடைந்த குடும்பங்களை இனம்கண்டு தினசரி உதவி செய்துவருகிறார்.

 

உதயநிதி ஸ்டாலின் பெயரில் இளைஞர்களுக்கும் படிக்கும் பிள்ளைகளுக்கும் உதவிவருகிறார். அந்தவகையில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை ரத்ததான முகாம் நடத்தி அனைவரது பார்வையையும் தன் பக்கம் இழுக்க செய்திருக்கிறார். "யார் அந்த பையன், கட்சியில என்ன பொறுப்பில் இருக்கிறார்" என சமீப நாட்களாகவே தி.மு.க. தலைமையின் பார்வை புகழரசன் மீது விழுந்திருக்கிறது.

 

இப்படி தி.மு.க.வினரின் கொண்டாட்டம், அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்க செய்திருக்கிறது. எல்லாம் தேர்தல் படுத்தும்பாடுதானோ.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பாராட்டு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister praises Minister Udayanidhi Stalin

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில், “மிக இளம் வயதில் பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.