Skip to main content

“மக்கள் பிரச்சனைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை..” - பிரேமலதா விஜயகாந்த்!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

"The central government does not listen to the problems of the people ..." - Premalatha

 

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீபூவராகசுவாமி கோவிலில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் விஜயபிரபாகர் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

 

தரிசனத்தை முடித்துவிட்டு  செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, “பெட்ரோல், டீசல், சிலிண்டர் ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.  மக்கள் பிரச்சனைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இதுபோன்று விலை உயர்வால் கட்டுமான பொருட்கள் முதல் அனைத்து பொருட்களும் விலையேறி உள்ளன. மத்திய, மாநில அரசுகள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். வரும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது அப்போதுதான் முடிவு செய்யப்படும். திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் பாதகமும் இல்லை சாதகமும் இல்லை” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘இடைத்தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு என்ன?’ - பிரேமலதா அறிவிப்பு!

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
Premalatha announcement about the What is the position of the DMdk by elections

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் (14.06.2024) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. '

Premalatha announcement about the What is the position of the DMdk by elections

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் விக்ரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது. இதுவரை தமிழகத்தில் நடந்த அனைத்து இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்ட தேமுதிக விக்ரவாண்டி தேர்தலைப் புறக்கணிக்கிறது. காரணம் தேர்தல்கள் என்பது ஜனநாயக ரீதியாக நேர்மையாக நடக்கவேண்டிய தேர்தல்கள். இன்றைய கால கட்டத்தில் ஆட்சியர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடதப்படுகிறது.

இந்த இடைதேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உழைப்பு, நேரம், பணம் அனைத்தும் விரயம் செய்ய விரும்பவில்லை. எங்கள் தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பாத காரணத்தால் தேமுதிக இந்த விக்ரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது. இன்றய ஆட்சியர்களின் கரங்களில் தேர்தல் என்கின்ற ஜனநாயகம் மிக பெரிய கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கின்றோம் என்று நாம் பெருமையாக சொல்லி கொண்டாலும் ஜனநாயகம் என்பது இன்றைக்கு கேள்விக் குறியக்கப்பட்டுள்ளது என்பதை ஒட்டு மொத்த மக்களும், தேமுதிகவினரும் அறிவர். எனவே இந்த விக்ரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

இளம்வயது வேட்பாளர் தோற்கக்கூடாது என்று சொன்னால் எப்படி? - பிரேமலதாவுக்கு அமைச்சர் பதிலடி!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Minister KKSSR Ramachandran  response to Premalatha accusation

விருதுநகர் வடக்கு மாவட்டம் – விருதுநகர் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உரையாற்றினார்.

“வணக்கங்களைக்  கைக்கூப்பி நாங்கள் சொல்வதைவிட,  உங்கள் காலைத் தொட்டு  வணங்குவதில்தான் எங்களுக்கு மன நிறைவு. இந்தியாவில் எங்கே வேண்டுமானாலும் மோடி வரலாம்; போகலாம். ஆனால்,  தமிழகத்திலே மோடிக்கு வேலை இல்லை என்று சொன்ன ஒரே தலைவர்,  நம்முடைய முதலமைச்சர். தேர்தலில் வெற்றியும் தோல்வியும் இயற்கையானது.  தோற்றவர்கள் இதுவரை பெரிய பொய் சொல்லியது இல்லை.  பெருந்தலைவர் காமராஜர் விருதுநகரில் தோல்வியைச் சந்தித்தார்கள். அதற்காக ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு அவர் அழுது கொண்டிருக்கவில்லை.  மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டார்கள்.  பேரறிஞர் அண்ணா காஞ்சிபுரத்திலே தோல்வியைச் சந்தித்தார்கள்.  மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்டார்கள்.  நம்முடைய இந்த நாடாளுமன்றத்திலேயே ஜெயலட்சுமி அம்மா எம்.பி. யாக இருக்கும்போது,  வெறும் 6000 ஓட்டு வித்தியாசத்திலே தோல்வியைச் சந்தித்தார்கள். அவர்கள் ஒன்றும் அன்றைக்குப் புலம்பவில்லை.  அதுதான் அரசியல்வாதியினுடைய லட்சணம்.

தேர்தலிலே சின்னவர்கள் பெரியவர்கள் என்ற கேள்வி எல்லாம் கிடையாது. தேர்தலில் கட்சிதான் முக்கியம். எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுகிறோம். அந்த கட்சி ஜெயிக்கிறதா? இல்லையா? என்றுதான் பார்க்கவேண்டுமே ஒழிய, சின்னவர்கள் பெரியவர்கள் என்ற பயம் எல்லாம் தேர்தலில் கிடையாது. அப்படி சின்னவர்கள் எல்லாம் ஜெயிக்கவேண்டும் என்று சொன்னால், ஒவ்வொரு ஊரிலும் 26 வயசு ஆளாக நிறுத்திவிட்டுப் போயிடலாம். இருபத்தாறு வயசு ஆட்களை நிப்பாட்டி,  சின்ன வயதிலே ஆளை நிறுத்தியிருக்கிறோம்,  அவர் தோற்கக்கூடாது என்று சொன்னால், எப்படி நாம் ஏற்றுக்கொள்ளமுடியும்? ஏற்கனவே அவர்கள் கட்சிக்கு அவர்கள் ஓட்டு வந்துள்ளது.

நம்முடைய கட்சிக்கு நமது ஓட்டு வந்திருக்கிறது. இதில் எங்களை என்ன குறை சொல்லமுடியும்? நாங்கள் அங்கே வாக்கு எண்ணுகிற இடத்திற்கு இரவு செல்லும் வரை வேட்பாளர் விஜயபிரபாகரன் அவர்களும்,  நம்முடைய தொகுதியினுடைய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவர்களும் கடைசி வரைக்கும் இருந்துவிட்டுத்தான்,  எண்ணி முடித்துவிட்டுத்தான்  போனார்கள்.  எண்ணி முடித்துவிட்டுப் போனவர்கள்,  இன்று அந்தத் தோல்வியைத் தாங்கமுடியாமல் எங்களைக் குறை சொல்லுகிறார்கள்.  நாங்கள் என்ன செய்ய முடியும்? உங்களுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை; நீங்கள் தோற்றிருக்கிறீர்கள். எங்கள் முதலமைச்சரை நம்பி வாக்களித்திருக்கிறார்கள். நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். இதுதான் ஜனநாயகமே ஒழிய, தோற்றவர் தூற்றுவது ஜனநாயகம் அல்ல. 

நான்கூட தேர்தலில் தோற்றேன். தோற்ற நேரத்திலே கடைசிவரை நான் உள்ளே அமர்ந்திருந்தேன். என்னைப் பார்த்ததும் தங்கம் தென்னரசு அழ ஆரம்பித்துவிட்டார்.  நான்,  அரசு விடுங்க இந்தக் கணக்கை அடுத்த தேர்தலில் நேர் பண்ணுவோம், விடுங்கன்னு சொல்லிட்டுத்தான் போனோம். அதுக்காக தேர்தல்ல தோற்றவுடனே, அங்கிருந்த பெட்டி எல்லாம் மாறிப் போச்சு,  ஓட்டுப் பெட்டி எல்லாம் மாத்திட்டாங்கன்னா சொல்லிட்டு வந்தேன். தேர்தல்ல தோற்பது என்பது இயற்கை. அதை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் இருப்பவர்கள்தான் தேர்தலில் நிற்கவேண்டும். அதுதான் நியாயம்.  முறை இதுதான்.  கலைஞர் எங்களுக்குச் சொல்லி கொடுத்த முறை.  எங்களைப் பொறுத்த அளவில் பரிசுத்தமாக இருக்கிறோம்.” எனப் பேசினார்.