Skip to main content

2026-ல் தமிழகம், கேரளாவில் பா.ஜ.க ஆட்சி மலரும்! - அண்ணாமலை

Published on 22/12/2020 | Edited on 22/12/2020

 

In 2026, the BJP will win in Tamil Nadu and Kerala. - Annamalai

 

2026 தமிழகம், கேரளாவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று திண்டுக்கல்லில் பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை பேசினார்.
 

திண்டுக்கல்லில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “வேளாண்மை சட்டங்கள், விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளவை. எனவே விவசாயிகள் மக்களை சந்தித்து எதிர்க் கட்சியினர் கூறும் பொய்யை நம்பாதீர்கள் என்று கூறுகிறோம். விவசாயிகள் நேரடியாக விளை பொருட்களை விற்க சட்டம் கொண்டு வருவதாக காங்கிரஸ், தி.மு.க. ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். தற்போது போராட்டம் நடத்துகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் 3 பொருட்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதாரவிலை இருந்தது. ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் 24 பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுகிறது. 

 

பஞ்சாபைச் சேர்ந்த இடைத்தரகர்கள் தான் போராட்டம் நடத்துகின்றனர். மு.க.ஸ்டாலின் அதற்கு முன்பு எங்கே சென்றார். மக்களுக்கு அனைத்து விஷயங்களும் தெரியும் தமிழகத்தின் வளர்ச்சிக்குத் திராவிடத் தலைவர்கள் மட்டுமே காரணம் என்று கூறக்கூடாது. காமராஜர், குமாரசாமி ராஜா ஆகியோர் செய்த நன்மைகளை மறைக்கின்றனர். தமிழக அரசியல் கெட்டுவிட்டது. எனவே இளைஞர்கள் மாற்று அரசியலை முன்னெடுத்துச் செல்கிறோம். திண்டுக்கல் பழனியில் பா.ஜ.க வலுவாக உள்ளது. ஆனால், தொகுதி ஒதுக்கீடு பங்கீடு குறித்து தலைமை முடிவு எடுக்கும்” என்று கூறினார்.


அதன்பின், பா.ஜ.க வர்த்தக அணி சார்பில், 'திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியை நமதாக்குவோம்' என்னும் தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு கடந்த 10 ஆண்டுகளாகத் தேர்தல் பிரச்சாரம் செய்யும் ஒரே கட்சி தி.மு.க.தான். தி.மு.க. ஆட்சியில் ஏரிகள், குளங்கள், ஆறுகள் காணாமல் போய்விட்டன. 


திண்டுக்கல்லில் குடகனாற்றை மீட்டெடுத்தே தீருவோம். கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலில் 17 சதவீத ஓட்டுகளைப் பெற்றுள்ளோம். எனவே 2021 மேற்கு வங்காளத்திலும் 2026 ஆம் ஆண்டு கேரளா மற்றும் தமிழகத்திலும் பா.ஜ.க ஆட்சி அமைப்போம்” என்று கூறினார்.

 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.