Skip to main content

2வது முறை மோடி வெற்றிபெற 10 நாட்கள் தீ யாகம்!!!

Published on 06/10/2018 | Edited on 06/10/2018
modi


கடந்த 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அந்த பதவிக்காலம் அடுத்த வருடத்தில் முடிவடைந்து, அடுத்த தேர்தல் வர இருக்கிறது. இந்த தேர்தலில் மோடிக்கு எதிராக கடும்போட்டி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 
 

இந்நிலையில், வருகின்ற தேர்தலிலும் மோடி வெற்றிபெற வேண்டும் என்று மதுராவை சேர்ந்த மோடி அறக்கட்டளை தலைவர் 10 நாட்களுக்கு யாகம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், வருகின்ற 10ஆம் தேதி யமுனை ஆற்றில் கச்சாந்தி மகாயாகம் நடத்துகிறோம். யாகம் நடத்தும்போது லட்சக்கணக்கான மக்கள் தீபம் ஏந்துவார்கள் என்றார். இவ்வாறு செய்வதால் கடவுளின் ஆசியில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார் என்றார்.

சார்ந்த செய்திகள்