Skip to main content

குரலால் சிக்கிய குற்றவாளி

Published on 23/02/2018 | Edited on 23/02/2018
stop



ஹரியானா மாநிலத்தில் குர்கானிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில்  உள்ள தருஹிராவில் 10வயதுடைய பார்வையற்ற சிறுமி தன்னை பலாத்காரம் செய்தவன் மீண்டும் தன் வீட்டிற்கு அருகே  வந்தபொழுது  அவன் குரலை வைத்து கண்டுபிடித்துள்ளார். அந்த நபரின் பெயர்சனோஜ் குமார். தற்போது சனோஜ் குமாரை அந்த சிறுமியின்  குடும்பத்தார் காவல்துறையிடம் ஒப்படைத்து உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அச்சிறுமியின் தந்தை காவல்துறையிடம் கூறும்பொழுது, இருபது நாட்களுக்கு முன்பு என் மனைவி மற்றும் மகள் இருவரும் ஜார்கண்டிலிருந்து தருஹிராவிற்கு தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக வந்தனர். அப்போது கடந்த 11ஆம் தேதி அன்று என் மனைவி, என் மகளை உறவினர் வீட்டிற்கு சென்றதால்  தனியாக வீட்டில் விட்டுச்சென்றுள்ளார். அவர் மீண்டும் வீட்டிற்கு வந்தபொழுது என் மகள் ஒரு வீத கலக்கத்திலும், பயத்திலும் இருந்தாள். என்னவென்று விசாரித்தபொழுது தன்னை யாரோ தாக்கி, பலாத்காரம் செய்துவிட்டதாக கூறியுள்ளார். இதை கேட்ட என் மனைவி, யார் என்று கேட்டபொழுது அவளுக்கு தெரியவில்லை. ஏனென்றால் என் மகளுக்கு  பார்வை குறைபாடு உள்ளது.

இதுகுறித்து நாங்கள்  தருஹிரா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தோம். அப்பொழுது யார் குற்றவாளி என்று கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது. வேறுவழியின்றி அங்கு உள்ளவர்களை பேசவைத்து கண்டுபிடித்துவிடலாம் என்று நினைத்து அதையும் செயல்படுத்தினோம் அப்பொழுதும் தெரியவில்லை. ஒருநாள் சனோஜ் எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டிலுள்ளவரிடம் பேசியபொழுது  என் மகள் அவன் குரலை  கண்டுபிடித்துவிட்டாள். உடனே அவனை அடையாளம் கண்டு என் மனைவியிடம் கூறியவுடன், என் மனைவி அங்குள்ள இளைஞர்கள் மூலம் தப்பிக்க இருந்தவனை பிடித்துவிட்டனர் என்றார். தற்போது ரேவரி பெண்கள் காவல் நிலைய அதிகாரிகள் சனோஜ் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து கைது செய்துள்ளனர்.

குழந்தைகளின் மீதான பாலியல் தாக்குதல் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதே அங்கிருக்கும் மக்களின் கருத்தாக இருக்கிறது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பா.ஜ.க.வில் இருந்து குடும்பத்துடன் விலகிய முன்னாள் ஒன்றிய அமைச்சர்!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Former Union Minister who left BJP with his family in haryana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இதற்கிடையில், பா.ஜ.க கட்சியில் இருக்கும் முக்கிய தலைவர்கள், அக்கட்சியின் மீது அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைவதும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பா.ஜ.கவில் இணைவதும் என மாறி மாறி கட்சி மாறி வருகின்றனர்.

இந்த நிலையில், பா.ஜ.க.வில் இருந்து முன்னாள் ஒன்றிய அமைச்சர் அக்கட்சியில் இருந்து அதிரடியாக விலகி காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார். இது பா.ஜ.க மேலிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சராக இருந்த பிரேந்தர் சிங், ஹிசார் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் இவர், உயிரியல் பன்முகத்தன்மை (திருத்தம்) மசோதா, 2021 மீதான கூட்டுக் குழு மற்றும் மனுக்களுக்கான குழு ஆகியவற்றின் உறுப்பினராகவும் உள்ளார். 

இந்நிலையில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரேந்தர் சிங், பா.ஜ.க.வில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “பாஜகவின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் ஜே.பி நட்டாவுக்கு அனுப்பியுள்ளேன். 2014-19ம் ஆண்டு பாஜக எம்.எல்.ஏவாக இருந்த எனது மனைவி பிரேம் லதாவும் கட்சியில் இருந்து விலகியுள்ளார். நாளை காங்கிரசில் இணைவோம்” என்று கூறினார். 

காங்கிரஸுடன், 40 ஆண்டுகால நீடித்த உறவுக்குப் பிறகு, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரேந்தர் சிங் பா.ஜ.கவில் சேர்ந்தார். கடந்த மார்ச் 10ஆம் தேதி அன்று பிரந்தர் சிங்கின் மகன் பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.