Skip to main content

"சுற்றுலா நிறுவனங்கள் ரயில்களை வாடகைக்கு எடுக்க அனுமதி" - இந்திய ரயில்வே துறை அமைச்சகம் அறிவிப்பு!

Published on 24/11/2021 | Edited on 24/11/2021

 

"Tourist companies allowed to rent trains" - Indian Railways Ministry announcement!

 

சுற்றுலா நிறுவனங்கள் ரயில்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என இந்திய ரயில்வே துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

நாடு முழுவதும் பயணிகள் மற்றும் சரக்கு ரயில் சேவைகளை இந்திய ரயில்வேதுறை வழங்கிவருகிறது. இந்நிலையில் 'பாரத் கவுரவ்' என்ற பெயரில் 150க்கும் மேற்பட்ட சுற்றுலா ரயில்களை இயக்க அந்த துறை முடிவு செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, முக்கிய நிகழ்ச்சிகள் தொடர்பான பயணங்களுக்குத் தனியார் சுற்றுலா நிறுவனங்களோ அல்லது மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்களோ ரயில்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். அதற்கான உரிய வாடகையை அந்நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

 

இதற்கான ஆன்லைன் பதிவு கட்டணமாக ரூபாய் 1 லட்சமும், மேலும் பல கூடுதல் வசதிகளைப் பயன்படுத்த ரூபாய் 1 கோடியும் வைப்புத்தொகைக்கு செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்க, தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிஷா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் ஆர்வமுடன் இருப்பதாக மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்