Skip to main content

பள்ளி மாணவர்கள் கையில் குச்சிகளா? - ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளைக் கண்டித்த மம்தா அரசு!

Published on 22/02/2018 | Edited on 22/02/2018
RSS

 

மேற்கு வங்கம் மாநிலத்தில் பாடம் சொல்லித் தருவதாகக் கூறி, பள்ளி மாணவர்களின் கைகளில் சிலம்பம் கம்புகளைத் தரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு வங்கம் மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

மேற்கு வங்கம் மாநில சட்டமன்றத்தில் இன்றைய கூட்டத்தில் பேசிய அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜீ, ‘நம் மாநிலத்தில் குறிப்பாக வடக்கு வங்காள பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தரும் பெயரில், சிலம்பம் கம்புகளைத் தருவதாக நமக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதுபோன்ற பயிற்சிகள் நடத்தக்கூடாது என்று நாம் ஏற்கெனவே அறிவித்திருந்தும், ஆட்சேபமில்லா சான்றிதழை நம்மிடமிருந்து பெறாமலேயே இதுபோல் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்’ என தெரிவித்தார்.

 

மேலும், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சிலர் தங்கள் பள்ளிகளில் இதுபோன்ற பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுவிட்டனர் என்றும், தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் செல்லவும் அரசு தயங்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

தொடர்ந்து பேசிய அவர், ‘யார் வேண்டுமானாலும் பள்ளிக்கூடங்களை நடத்தலாம். ஆனால், குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தரும் பெயரில் குறுகிய மதவாத எண்ணம் கொண்டவர்களாக மாற்றும் முயற்சியை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. இதுவரை 125 பள்ளிகளில் இவ்வாறு நடப்பது தெரியவந்துள்ளது. மேலும், 493 பள்ளிகள் கண்காணிப்பில் உள்ளன. இதுப்பற்றிய தகவல்கள் கிடைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது’ என பேசி முடித்தார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

 மனரீதியாக துன்புறுத்தப்பட்ட அபிநந்தன்?

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

    

 

பாகிஸ்தானில் இருந்தபோது அபிநந்தன் மனரீதியாக  துன்புறுத்தப்பட்டதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

n

 

பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்ட  இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நேற்று இரவு 9 மணிக்கு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டார்.   அதைத்தொடர்ந்து, டெல்லி ராணுவ மருத்துவமனையில் பரிசோதனைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அபிநந்தன் கூறியதாக முன்னர் வெளியான வீடியோ பதிவுகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தன்னை துன்புறுத்தவில்லை. நல்லமுறையிலும், கண்ணியமாகவும் பார்த்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், பாகிஸ்தானிடம் சிக்கிய விமானப்படை வீரர் அபிநந்தன், தன்மீது அந்நாட்டு ராணுவத்தினர் உடல்ரீதியாக தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், மனரீதியாக நான் மிகவும் துன்புறுத்தப்பட்டேன் என தெரிவித்ததாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் இன்று  தகவல் வெளியிட்டுள்ளது. 


 

Next Story

பிரனாப் மற்றும் மோகன் பாகவத் எண்ணங்கள் ஒன்றே! - ராம் மாதவ்

Published on 14/06/2018 | Edited on 14/06/2018

பிரனாப் மற்றும் மோகன் பாகவத்தின் எண்ணங்களில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என பா.ஜ.க. தேசிய செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
 

pranab

 

 

 

கடந்த ஜூன் 7ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில், ஆர்.எஸ்.எஸ். சார்பில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரனாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் அந்த அழைப்பை ஏற்றிருந்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரனாப் முகர்ஜி தேசம், தேசியவாதம், தேசப்பற்று குறித்து பேசினார். 
 

ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா, ரந்தீப் சர்ஜீவாலா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பிரனாப் முகர்ஜியின் உரையை வெகுவாக பாராட்டி இருந்தாலும், பலர் பிரனாப் கலந்துகொண்டதற்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தனர். 
 

 

 

இந்நிலையில், பிரனாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். விழாவில் கலந்துகொண்டது குறித்து பேசியுள்ள பா.ஜ.க. தேசிய செயலாளர் ராம் மாதவ், ‘ஆர்.எஸ்.எஸ். எப்போதுமே வெளிப்படையான அமைப்பாக இருந்து வருகிறது. அது முன்னாள் குடியரசுத்தலைவர் பிரனாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுத்ததின் பேரில், அவர் ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்தவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதில் பெரும்பான்மையானவை மோகன் பாகவத்தின் எண்ணங்களை ஒத்திருந்தன. அதில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகள்தான் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தன’ என தெரிவித்துள்ளார்.