ராமரை கடுமையாக விமர்சனம் செய்த சமாஜ்வாதி தலைவர் நரேஷ் அகர்வாலை பாஜகவில் சேர்த்தது தான் தோல்விக்கு காரணம். அவரைச் சேர்த்ததால் ராமர் கோபமடைந்து பாஜகவை தோற்கடித்தார் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து போட்டியிட்டதால் பாஜக தோற்றது என்று நான் நினைக்கவில்லை. நரேஷ் அகர்வாலுக்கு பாஜக சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுத்ததை ராமர் விரும்பவில்லை என்று சஞ்சய் ராவத் கூறினார்.
“ராமரின் கோபம்தான் பாஜகவின் தோல்விக்கு காரணம்!” சிவசேனா சொல்கிறது
சார்ந்த செய்திகள்
Next Story
முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்
மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்.
மராட்டிய மாநிலம் சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் மனோகர் ஜோஷி. மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள நந்தவி கிராமத்தில் 1937 டிசம்பர் இரண்டாம் தேதி பிறந்தார் மனோகர் ஜோஷி. அரசியலில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக கட்சிப் பணிகளில் இறங்கிய மனோகர் ஜோஷி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் உள்ள அனைத்து அவைகளுக்கும் தேர்வாகியுள்ளார்.
1995 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் மராட்டிய மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்தார். 1972 முதல் 1989 வரை மராட்டிய மாநில சட்ட மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். 2002-2004 வரையிலான காலகட்டத்தில் மக்களவை சபாநாயகராகவும் பதவி வகித்தார். தற்போது 86 வயதான நிலையில் மாரடைப்பு காரணமாக மும்பையில் அவர் காலமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Next Story
“சட்டப்பேரவைத் தலைவர் அநீதிகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” - பிரியங்கா சதுர்வேதி
மகாராஷ்டிராவில் கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், என்சிபி ஆதரவுடன் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார். இரண்டரை ஆண்டுக்கு பின் சிவசேனா பிளவுபட்டு பாஜகவுடன் சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சியில் அமர்ந்தார். அவருடன் சென்ற 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உத்தவ் தாக்ரே சார்பில் முறையிட்டது.
இந்த கோரிக்கை மீது சபாநாயகர் ராகுல் நார்வேகர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். சிவசேனா உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் சபாநாயகருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தகுதி நீக்கம் குறித்து இன்றைக்குள் முடிவு எடுக்க வேண்டும் என சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, 'ஒரு கட்சி தலைவரின் விருப்பத்தை ஒரு கட்சியின் ஒட்டுமொத்த விருப்பமாக கருத முடியாது என தெரிவித்துள்ள மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நார்வேகர், 'ஏக்நாத் ஷிண்டேதான் சிவசேனா கட்சியின் உண்மையான தலைவர். 2022 ஆம் ஆண்டு ஷிண்டேவின் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது. ஷிண்டேவை சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்க உத்தவ் தாக்கரேவிற்கு அதிகாரம் இல்லை' என தெரிவித்தார்.
இந்த நிலையில், சிவசேனா (உத்தவ் தாக்கரே) பிரிவைச் சேர்ந்த எம்.பி. பிரியங்கா சதுர்வேதி இன்று (11-01-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகரின் முடிவு துர்திர்ஷ்டவசமானது மற்றும் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தலைவர் செய்யும் அநீதிகளை மகாராஷ்டிரா மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவை அனைத்திற்கும் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என்று கூறினார்.