Skip to main content

பாப் பாடகருக்கு இரண்டாண்டு சிறை! 

Published on 17/03/2018 | Edited on 17/03/2018

பஞ்சாப் பாப் பாடகர்  தலெர் மெஹந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

 

daler mehendi



தன் இசைக் குழுவுடன் அமெரிக்கா செல்வதாக கூறி, வேறு சிலருக்கும் விசா வாங்கி சட்டவிரோதமாக அமெரிக்கா கூட்டிச் சென்றதற்காக கடந்த 2003ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அவரும் அவரது சகோதரர் சம்ஸர் சிங்கும் 1998 மற்றும் 1999 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு சென்று படல் நிகழ்ச்சிகள் நடத்த சென்றிருக்கின்றனர். அவர்களுடன்  சென்றவர்களில் பத்து பேர் அங்கேயே விடப்பட்டு வந்திருக்கின்றனர். இதற்காக ஒரு கோடி ரூபாய் பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர், பாட்டியாலா காவல்துறை வழக்கு பதிவு செய்து இப்பிரச்சனையயை பற்றி விசாரிக்க ஆரம்பித்தது. சாட்சிகள் அனைத்தும் வலுவாக இருக்க, நேற்று (16 மார்ச்) இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தலெர் மெஹந்தி, உடனடியாக பெயிலும் வாங்கியிருக்கிறார். வெளியே வந்தவர், "நான் மீண்டும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யவுள்ளேன்" என்று கூறியிருக்கிறார்.              

சார்ந்த செய்திகள்

Next Story

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்; குழு அமைத்த கமல்ஹாசன்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Parliamentary elections approaching; Kamal Haasan announce Team

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு மற்றும் கூட்டணி தொகுதிப் பங்கீடு ஆகிய விஷயங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழுவை கட்சித் தலைமை அறிவித்துள்ளது.  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஒருங்கிணைப்புக் குழு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். ஏ.ஜி. மௌரியா, தங்கவேலு, அருணாச்சலம் ஆகியோர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான செயல் திட்டங்களை உருவாக்கவும், செயல்படுத்தவும் இவர்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Next Story

'அது ஒரு கருவிதான்'-பணம் குறித்து கமல்ஹாசன் பேச்சு

Published on 24/09/2023 | Edited on 24/09/2023

 

'It's a tool' - Kamal Haasan talks about money

 

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பணம் குறித்து உரையாற்றிய பேச்சு இணையத்தில்  வைரலாகி வருகிறது.

 

கமல்ஹாசன் பேசியதாவது, ''என்னோட அனுபவத்தில் சொல்கிறேன். மூச்சு இல்லாமல் 40 செகண்ட் அல்லது ஒரு நிமிடம் தாங்குவோம். தண்ணி இல்லாமல் ஆறு ஏலு நாட்கள் தாங்குவோம். சாப்பாடு இல்லாமல் பத்து நாட்கள் தாங்குவோம். அதைவிட பணம் எப்படி முக்கியமாக இருக்க முடியும். இதையெல்லாம் வாங்குவதற்கு அது ஒரு கருவி. ஆண்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் தாடி வைக்க வேண்டுமா அல்லது மழிக்க வேண்டுமா என்பது உங்களுடைய இஷ்டம். அதை நீங்கள் பிளேடு கிட்டப் போய் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அதுவெறும் கருவி தான். அதுவா சொல்லும் வேணாம் தாடிய கொஞ்சம் நீளமாகவே வச்சுக்கோ அல்லது முழுவதும் சவரம் பண்ணிக்க, இல்ல மீசை மட்டும் வச்சுக்க என பிளேடுக்கு சொல்லத் தெரியாது. அவ்வளவுதான் பணமும். அது பேசாமடந்தை.

 

நான் சினிமா நடிக்க வந்த பொழுது இப்படி எல்லாம் நடிக்க முடியுமா என்று பலர் இருந்தனர். முக்கியமாக என் ஏரிக்கரையில் தெரிந்த முதல் சூரியன் சிவாஜி. அதன் பிறகு தான் இப்படி ஒரு கேலக்ஸி இருக்கிறது என்றே தெரியும். அதற்கு காரணம் எனக்கு கோனார் நோட்ஸ் கொடுத்து பொழிப்புரை சொல்லி அனுப்பி வைத்தவர் சிவாஜி சார் தான். நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்வதெல்லாம் இன்னொரு சிவாஜி ஆகவேண்டும் என நான் நினைக்கவே இல்லை. இன்னொரு சிவாஜி வருவாரா என்று கூட கேட்கவில்லை'' என்றார்.