Skip to main content

காதலனுக்காகத் திருடிய காதலிகள்! - போலீஸ் அதிர்ச்சி

Published on 06/06/2018 | Edited on 06/06/2018
lady mumbai

 

மும்பையில் உள்ளூர் ரயிலில் மொபைல் திருடியதற்காக இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக பெண்கள் சிறப்பு வகுப்பில் திருடப்பட்ட மொபைல்களுக்காக இவர்களைக் கைது செய்துள்ளனர்.

இது குறித்து ரயில்வே காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது சில திடுக்கிடும் தகவல்கள் திருடப்பட்டவர்களால் சொல்லப்பட்டது. ட்விங்கில் சோனி மற்றும் டினால் பார்மர் என்ற இந்த இரு பெண்கள் தங்களின் காதலர்களுக்கு செலவு செய்வதற்காக இந்தத் திருட்டுகளை எல்லாம் செய்ததாகக் கூறியுள்ளனர். 

 

 


இது தொடர்பாக ராகுல் ராஜபுரோகித் என்பவரையும் கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்து மூன்று லட்சம் மதிப்பிலான மொபைல்களை மீட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் கல்லூரி செல்லும்போது கைது செய்துள்ளனர். அப்போது ட்விங்கில் என்பவரின் பையை தேடிப்பார்க்கையில் ஒன்பது மொபைல்களை போலீஸார் எடுத்துள்ளனர். மொத்தமாக அவர்களிடமிருந்து 38 மொபைல்களும், 30 மெமரிகார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.          




 

சார்ந்த செய்திகள்