Skip to main content

பெட்ரோகெமிக்கல் திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர்!

Published on 14/02/2021 | Edited on 14/02/2021

 

 

pm narendra modi inauguration in kerala

பெட்ரோகெமிக்கல் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

 

டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று (14/02/2021) காலை சென்னை வந்தார். பின்பு, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றினார்.

 

பின்னர் சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு தனிவிமானம் மூலம் கேரளா மாநிலம் கொச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். 

pm narendra modi inauguration in kerala

அதன்படி, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் புரோப்லின் டெரிவேடிவ் பெட்ரோகெமிக்கல் திட்டத்தை நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணித்தார். இந்த திட்டத்தின் மூலம் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் அக்ரிலேட், அக்லிக் அமிலம், ஆக்சோ- ஆல்கஹால் ஆகியவை தயாரிக்கப்படும். திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூபாய் 3,700 கோடி முதல் ரூபாய் 4,000 கோடி வரை அந்நிய செலாவணி மிச்சமாகும். ரூபாய் 6,000 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த வளாகம் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. 

 

கேரளா மாநிலம், எர்ணாகுளம் தளத்தில்  நவீன் வசதிகளைக் கொண்ட 'சாகரிகா' சர்வதேச கப்பல் முனையம் ரூபாய் 25.72 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதலாவது முழு சர்வதேச கப்பல் முனையமாகும். இந்த சர்வதேச கப்பல் முனையத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

pm narendra modi inauguration in kerala

அதேபோல், கொச்சி வெலிங்டன் தீவில் எம்வி ஆதி சங்கரா, எம்வி சி.வி.ராமன் பெயர் கொண்ட இரண்டு ரோ- ரோ கப்பல்களையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர். பொல்கோட்டி- வெலிங்டன் தீவுக்கும் இடையே இரண்டு ரோல் ஆன்/ ரோல் ஆப் கப்பல்கள் பயன்படுத்தப்படும். 80 வாகனங்கள், 30 பயணிகளை ஏற்றி செல்லும் திறன் கொண்டவையாகும் ரோ- ரோ கப்பல்கள்.

 

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் கடல்சார் பொறியியல் நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். கடல்சார் பொறியியல் நிறுவனம் இந்தியாவில் கப்பல் கட்டும் தளத்தில் இயங்கும் ஒரே நிறுவனமாக இது திகழும். கப்பல் கட்டுமானம், பழுது நீக்குதல் பிரிவில் பல்வேறு கப்பல்களின் பயிற்சி பெறுவோருக்கு நவீன பயிற்சி வழங்கப்படும். ரூபாய் 27.5 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் 114 புதிய பட்டதாரிகளை உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

pm narendra modi inauguration in kerala

கொச்சி துறைமுகத்தில் தெற்கு நிலக்கரி தள கட்டுமான திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 'சாகர்மாலா' திட்டத்தின் கீழ் ரூபாய் 19.19 கோடியில் நிலக்கரி தளம் மறுகட்டுமானம் செய்யப்படுகிறது. திட்டம் முடிவுற்றவுடன் கொச்சி துறைமுகத்தில் பிரத்யேக ரசாயன கையாளுதலுக்கு இது பயன்படும்.

pm narendra modi inauguration in kerala

இந்த நிகழ்ச்சியில் கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன், மாநில அமைச்சர்கள், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.