Skip to main content

”கடினமான முடிவுகள் இனியும் தொடரும்”- பிரதமர் மோடி

Published on 21/09/2018 | Edited on 21/09/2018
modi metro


டெல்லியிலுள்ள துவாரகா பகுதியில் சர்வதேச மாநாடு மற்றும் ஏற்றுமதி மையம் (ஐஐசிசி) அமைப்பதற்கான நிகழ்ச்சியில் மோடி நேற்று பங்கேற்று, அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏர்போர்ட் மெட்ரோ ரையிலில் பயணிகளுடன் பயணியாக பயணித்தார் மோடி. 


அடிக்கல் நாட்டியன் பேசிய மோடி, “ என்னுடைய அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும். ஒன்றை உறுதியளிக்கின்றேன், இது மக்களுக்கான அரசு. கடந்த 4 வருடத்தில் மக்களின் நலனுக்காக பல்வேறு கடினமான நடவடிக்கை எங்கள் அரசால் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் இனிவரும் காலங்களிலும் தொடரும். கடினமான முடிவுகள் நின்றுவிடாது, தொடர்ந்து எங்கள் அரசால் எடுக்கப்படும்” என்றார்.


மேலும்,” நாட்டின் பொருளாதாரம் சர்வதேச சவால்களை எதிர்கொண்டு, தற்போது 8 சதவீதத்திற்கு வளர்ந்து வருகிறது. அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலராக உயரும். அடுத்த 10 ஆண்டுகளில் இது 10 லட்சம் கோடி டால்ராக உருமாறும்” என்று கூறினார். பின்னர், இந்திய பொருளாதாரத்தை பற்றியும், அதன் வளர்ச்சியை பற்றியும் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்