Skip to main content

கேரளாவில் சற்று அதிகரித்த தினசரி கரோனா பாதிப்பு!

Published on 15/09/2021 | Edited on 15/09/2021

 

corona

 

இந்தியாவில் கேரள மாநிலத்தில்தான் தினசரி கரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்துவருகிறது. இருப்பினும் செப்டம்பர் முதல் வாரத்தில் 30 ஆயிரமாக இருந்துவந்த தினசரி கரோனா பாதிப்பு தற்போது கணிசமாகக் குறைந்துள்ளது.

 

இந்தநிலையில் இன்று கேரளாவில் 17,681 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 208 உயிரிழந்துள்ளனர். கேரளாவில் நேற்று 15,876 பேருக்கு கரோனா உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

கேரளாவில் கரோனா பரவல் உச்சத்தைக் கடந்து விட்டதாக எய்ம்ஸ் பேராசிரியர் கூறியிருந்தது இங்குக் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்