Skip to main content

படகு கவிழ்ந்து விபத்து; 14 மாணவர்கள் உயிரிழப்பு

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Gujarat Boat capsizes in Vadodara's lake 10 rescued 

குஜராத்தில் படகு கவிந்து விபத்தில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் வதோராவில் உள்ள ஹரினி மோட்நாத் ஆற்றில் சுற்றுலா வந்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 27 பேர் படகில் இன்று மாலை பயணம் செய்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் 14 பேர் மற்றும் அசிரியர்கள் 2 பேர் என 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படகில் இருந்து இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் கூறுகையில், “இது மிகவும் வருத்தமான சம்பவம். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விபத்தில் சிக்கியவர்களில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அரசு மிகவும் தீவிரமாக கவனித்துக் கொண்டுள்ளது. அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்