Skip to main content

எம்.எல்.ஏ-க்கள் வீட்டில் ரெய்டு நடத்திய அதிகாரி; சுற்றிவளைத்த பின் வெளியான உண்மை

Published on 24/10/2023 | Edited on 24/10/2023


 

Fake Officer who raided MLA's house in puducherry

புதுச்சேரி மாநிலம், ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கரன். இவர் உழவர்கரை தொகுதியில் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், இவர் பா.ஜ.க கட்சியின் ஆதரவு பெற்ற எம்.எல்.ஏ.வாகவும் இருக்கிறார்.

 

இந்த நிலையில், நேற்று முன் தினம் (22-10-23) இவருடைய செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில், எதிர்முனையில் இருந்து சிவசங்கரனிடம், ‘தான் ஓரு அமலாக்கத்துறை அதிகாரி என்றும், நீங்கள் கடந்த 2 ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக புகார் வந்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும், உங்கள் வீட்டில் சோதனை செய்து இது பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதற்கு சிவசங்கரன்,  தாராளமாக விசாரித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். 

 

அதனையடுத்து, சில மணி நேரம் கழித்து சிவசங்கரன் வீட்டிற்கு கம்பீரமான தோற்றத்தில் ஒருவர் வந்துள்ளார். மேலும், அந்த நபர் சிவசங்கரனிடம், செல்போனில் பேசியது நான் தான் எனக்கூறி அடையாள அட்டையை கேட்டுள்ளார். இவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த சிவசங்கரன், அவரது அலுவலக ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

 

தகவல் அறிந்து அலுவலக ஊழியர்கள் சிவசங்கரன் வீட்டிற்கு விரைந்து வந்துள்ளனர். இதையடுத்து, அந்த நபரை பிடித்து அந்த ஊழியர்கள் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ஒரு போலி அமலாக்கத்துறை அதிகாரி என்பது தெரியவந்தது. உடனடியாக, அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து ரெட்டியார்பாளையம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 

 

இதையடுத்து, காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அந்த நபர் சென்னையைச் சேர்ந்த வரதராஜன் ஆழ்வார் (35) என்பது தெரியவந்தது. மேலும், புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த இவர் உருளையன்பேட்டை பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அங்கிருந்து பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த இவர், கூகுள் வாயிலாக புதுச்சேரி எம்.எல்.ஏ.க்களின் தொடர்பு எண் மற்றும் வீட்டின் முகவரியை சேகரித்துள்ளார். அதன்படி, புதுச்சேரி பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம், காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதன், என்.ஆர். காங்கிரஸ் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ நேரு மற்றும் சிவசங்கரன் ஆகியோர்களை தொடர்பு கொண்டு அளவுக்கு அதிகமான சொத்து சேகரித்துள்ளதாக புகார் வந்துள்ளது என்றும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி மிரட்டியுள்ளார். இந்த நிலையில்தான் சிவசங்கரன் வீட்டிற்கு சென்றபோது பிடிபட்டுள்ளார் என்று காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரிடம் ரெட்டியார்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.