Skip to main content

'மாப்பிள்ளையும் இல்லை! மணப்பெண்ணும் இல்லை!'... செல்போனில் நடந்த நிச்சயதார்த்தம்... வாயடைத்துப் போய் நிற்கும் நெட்டிசன்கள்...!(வீடியோ)

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

முன்பு திருமணம் என்றால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து மணமகளை கூட்டிக்கொண்டு மணமகள் வீட்டிற்கு செல்வார்கள். அங்கு மணமகள் தலைகுனிந்தவாறு  தட்டில் காப்பியை கொண்டு வந்து மணமகன் மற்றும் உறவினர்களுக்கு தருவார். புகைபடத்தில் மட்டுமே பார்த்த மணமகளின் முகத்தை நேரில் காண வேண்டும் என்று மணமகன் ஏங்கித் தவிப்பான். ஆனால் அவளோ தலைகுனிந்த படியே வீட்டிற்குள் சென்று விடுவாள். இருவீட்டாரும் பேசி முடித்துவிட்டு புறப்பட்டு விடுவார்கள்.

 

engagement on cellphone

 



பின்னர் மணமகன் தனது வாழ்கை துணைவியாக வரயிருப்பவளை எப்படியாவது கண்டுவிட வேண்டும் என்று, இரண்டுநாள்கள் கழித்து எதாவது ஒரு காரணத்தைக் கூறி மணமகள் வீட்டிற்கு செல்வான். ஆனால் அங்கு மாமனார் மட்டுமே பேசி முடித்து அவனை வீட்டிற்கு வழி அனுப்பி விட்டுவிடுவார். இதையடுத்து திருமணத்தில்தான் மணமகன், மணமகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வார்கள். இப்படிப்பட்ட பல சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன்தான் பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

 


ஆனால் தற்போது செல்போன் மூலம் ஒரு தம்பதி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட சம்பவம் நெட்டிசன்களை உச் கொட்ட வைத்திருக்கிறது. நிஜத்தில் எப்படி நிச்சயதார்த்தம் நடைப்பெறுமோ அதேப்போல தம்பதியினர் வீடியோ காலில் இருக்க அவரது குடும்பத்தினர் ஆடை, அணிகலன்களை போனின் முன்பு வைத்து நிச்சயம் செய்யும் காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றது. 
 

 

சார்ந்த செய்திகள்