Skip to main content

தெலுங்கானாவை தெறிக்கவிடும் கரோனா! ஒரு லட்சத்தை நெருங்கும் தொற்று!

Published on 16/08/2020 | Edited on 16/08/2020
jk


உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

 


இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகின்றது. தெலுங்கானா மாநிலத்தில் ஆரம்பத்தில் குறைவாக இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகின்றது. இன்று ஒரே நாளில் இதுவரை 1,269 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 91,361 ஆக உயர்ந்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்