Published on 16/06/2020 | Edited on 16/06/2020
![sdf](http://image.nakkheeran.in/cdn/farfuture/yNmMa8lMDF0eC_6TxH6xq5NoCLMiu1oy3uONbHBYHDM/1592327716/sites/default/files/inline-images/QRG_13.jpg)
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு பாதிப்பு உயர்ந்து வருகின்றது. இன்று மட்டும் கேரளாவில் 79 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1,366 பேர் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தமாக 1,234 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.