Skip to main content

விமான நிலையத்தில் சல்மான்கானை நிறுத்திய வீரருக்கு பரிசளித்த சிஐஎஸ்எப்!

Published on 25/08/2021 | Edited on 25/08/2021

 

salman khan

 

இந்தி திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர் சல்மான்கான், தனது பட ஷூட்டிங்கிற்காக ரஷ்யா செல்ல சில தினங்களுக்கு முன்பு மும்பை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எப் வீரர் ஒருவர் சல்மான்கானை சோதனை செய்வதற்காக நிறுத்தினார். இது தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலானது.

 

சிஐஎஸ்எப் வீரரின் இந்த செயல் சமூகவலைத்தளங்களில் பெரும் பாராட்டை பெற்றது. இந்தநிலையில் சல்மான்கானை நிறுத்திய சிஐஎஸ்எப் வீரர், அதை பற்றி ஊடகங்களிடம் பேசிவிடக்கூடாது என்பதற்காக, அவரின் தொலைபேசி உயர் அதிகாரிகளால் பறிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இந்தநிலையில் இந்த சர்ச்சைக்கு சிஐஎஸ்எப் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சல்மான்கானை நிறுத்திய வீரருக்கு தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை என்றும், அவரை பாராட்டி தக்க பரிசளிக்கப்பட்டதாகவும் சிஐஎஸ்எப் கூறியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்