Skip to main content

கடந்த 24 மணி நேரத்தில் 14,623 பேருக்கு கரோனா தொற்று உறுதி; 197 பேர் பலி!!

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

ுப

 

இந்தியாவில் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கரோனா வேகமாகப் பரவிவந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருகிறது. கேரளாவில் மட்டும் தினசரி 6 ஆயிரத்தைக் கடந்து தொற்று எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,623 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 197 பேர் இந்த நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர்.

 

நோய்த் தொற்றிலிருந்து நேற்று (19.10.2021) ஒரேநாளில் 19,446 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாடு முழுவதும் இதுவரை 3.34 கோடி பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 1,78,068 லட்சம் பேர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அதேபோன்று உயிரிழப்பு எண்ணிக்கையும் சீராக குறைந்துவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தற்போதுவரை 98.67 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்