Skip to main content

தீபக் ராஜா கொலை வழக்கு; 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை!

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
tirunelveli dt deepak raja incident Police intensively investigate 5 people

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் ராஜா (வயது 35). இவர் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் நேற்று முன்தினம் (20.05.2024) மதியம் 02:00 மணியளவில் தான் திருமணம் செய்து கொள்ளும் பெண் மற்றும் அவரது தோழிகளுடன் சேர்ந்து கேடிசி நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். அதன் பின்னர் தனது வாகனத்தை எடுப்பதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் ஒன்று தீபக் ராஜாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதில் சம்பவ இடத்திலேயே தீபக் ராஜா துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து பாளையங்கோட்டை காவல்துறையினர் தீபக் ராஜாவின் உடலைக் கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தக் கொலை சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர். அப்போது கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சி ஒன்றில் ஆறு பேர் கொண்ட கும்பல் தீபக் ராஜாவை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யும் காட்சிகள் பதிவாகி இருந்தன. 

tirunelveli dt deepak raja incident Police intensively investigate 5 people

இதனையடுத்து இந்தக் கொலை வழக்கை விசாரிக்க திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது. இதற்கிடையே இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்த பிறகே தீபக் ராஜ் உடலை வாங்குவோம் எனக் கூறி அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தீபக் ராஜா கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் தனிப்படை போலீசாரிடம் சரண் அடைந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து போலீஸாரிடம் சரணடைந்த 5 பேரை பாளையங்கோட்டை அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசாரின் முழுமையான விசாரணைக்கு பின்னரே இக்கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்