Skip to main content

நீங்கள் இடதா வலதா? - மக்களின் கேள்விகளுக்கு கமல் பதில்!

Published on 21/02/2018 | Edited on 22/02/2018
kamal


புதிய கட்சியை துவங்கியுள்ள கமல்ஹாசன், மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, ரசிகர் மத்தியில் தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார். தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் கட்சியின் கொள்கை குறித்து கமல்ஹாசன் விளக்கமளித்தார்.

இதனை தொடர்ந்து தொண்டர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்...

நீங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவச திட்டம் நீடிக்குமா?

எனது ஆட்சியில் இலவசம் இருக்காது, தகுதி மேம்படுத்தப்படும். வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். குவாட்டரும், ஸ்கூட்டரும் இருக்காது. மற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வளவு நாள் எங்கிருந்தீர்கள் ?

இவ்வளவு நாள் உங்கள் உள்ளங்களில் இருந்தேன் இனிமேல் உங்கள் இல்லங்களில்.

ஊழலை நீங்கள் ஒழிப்பீர்களா?

நான் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது, நீங்களும் வாருங்கள் சேர்ந்து ஊழலை ஒழிப்போம். ஊழலை ஒழிக்க தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் தியாகம் செய்ய வேண்டும்.

கஷ்டம் வந்ததால் விஸ்வரூபம் எடுத்தீர்களா?

விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வரை எடுத்துவிட்டேன் (சிரித்துக்கொண்டே).
நிஜ வாழ்க்கையில்  மக்களின் நிலையை கண்டு இனிமேல்தான் எடுக்க வேண்டும் விஸ்வரூபம்.
 

kamal speech


உங்கள் வழிகாட்டி யார்?

பகுத்தறிவுவாதி என என்னை கேலி செய்வார்கள், ஆனால் அதுதான் உண்மை. காந்தி, அம்பேத்கர், நேரு, கெஜ்ரிவால், சந்திரபாபு, பினராயி விஜயன், ஒபாமைவையும் பிடிக்கும்.

நீங்கள் இடதா வலதா?

நேற்று என்னிடம் பேசிய ஆந்திர முதல்வர் கூறினார், 'இசங்களெல்லாம் பிறகுதான். மக்கள் நலனே முக்கிய'மென்று. நான் இடதுமல்ல வலதுமல்ல, மக்கள் நலனுக்கு எது தேவையோ அந்தப் பக்கம் செல்வேன். அதனால் தான் 'மய்யம்' என்று பெயர் வைத்துள்ளேன். 

எத்தனை நாள் தாக்குபிடிப்பீர்கள்?

நான் ஏற்கனவே கூறிவிட்டேன். இனி என் வாழ்க்கை முழுவதும் இதில் தான் என்று. சிலர் என் வயதைக் கிண்டல் செய்கிறார்கள், குறைவான ஆயுள் கொண்டவர்கள் என் வயதைக் கிண்டல் செய்கிறார்கள். நான் நூறு வயது வரை ஆள வேண்டுமென்று நினைக்கவில்லை. எனக்கு 64 வயசு ஆகுது. இனி எஞ்சி உள்ள வாழ்வு உங்களுக்குத்தான், தமிழ் மக்களுக்குத்தான்.

போன்சாய், மரபணு விதை என்று கூறுகிறார்களே?

எல்லா செடிகளும் போன்சாய் செடிகள் தான். விதைகள் நன்றாக முளைக்கும் போது கமிஷனுக்கு ஆசைப்பாட்டால் அனைத்து விதைகளும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் தான்

உங்கள் பிள்ளைகள் அரசியலுக்கு வருவார்களா?

என் பெண்கள் அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இவர்கள் (தொண்டர்களை பார்த்து) எனது பிள்ளைகள். அவர்கள் அரசியலுக்கு வந்து விட்டார்கள்.

தமிழை காக்க என்ன செய்வீர்கள்?

உங்கள் பேச்சு வழக்கில் தமிழ் இருந்தால் தமிழ் வாழும் என அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

"பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது" - புதுமடம் ஹலீம்

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

Pudhumadam Haleem Interview

 

தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை நம்மோடு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீம் பகிர்ந்து கொள்கிறார்.

 

நிதியமைச்சர் பி.டி.ஆர் பேசியது போன்று வெளியான ஆடியோ போலியானது என்பது அனைவருக்கும் தெரியும். எதிரில் பேசுபவர் யார் என்பதே அந்த ஆடியோவில் வெளியிடப்படவில்லை. இந்த ஆடியோ வெளியான பிறகு நடுநிலையாளர்கள் என்கிற போர்வையில் இருக்கும் பத்திரிகையாளர்கள் சிலர் முதல்வர் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றனர். நிதியமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் பேசினர். திமுக ஆட்சியின் மீது மிகப்பெரிய களங்கம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கினர். உண்மையை உறுதிப்படுத்துவதற்கு முன்பே இவை அனைத்தும் நடந்தன. 

 

இதற்கு பி.டி.ஆர் இரண்டு முறை விளக்கம் கொடுத்தார். இதுபோன்ற மூன்றாம் தர அரசியலுக்கு தான் பதில் தர விரும்பவில்லை என்றார். ஆனாலும் மீண்டும் மீண்டும் முதல்வர் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றனர். அமைச்சரே இதற்கு பதில் கூறிவிட்ட பிறகு தான் இதுபற்றிப் பேசி அவர்களுக்கு விளம்பரம் தர விரும்பவில்லை என்று முதல்வரே தற்போது கூறிவிட்டார். இதன் மூலம் பி.டி.ஆர் பதவி விலகமாட்டார் என்பதை முதல்வர் உறுதிப்படுத்தியுள்ளார். பி.டி.ஆர் ஒரு சிறந்த நிதியமைச்சர். திமுக ஐடி விங் தலைவராகவும் சிறப்பாகப் பணியாற்றினார்.

 

ஜிஎஸ்டி கவுன்சிலில் மற்றவர்கள் கேட்காத கேள்விகளை பிடிஆர் கேட்பதால் அவரைப் பதவி விலக வைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசே முயல்கிறது. பல்வேறு நபர்களின் கருத்துக்களை கேட்டுத்தான் ஒரு சட்டத்தைக் கொண்டு வருவார்கள். 12 மணி நேர வேலை சட்டத்தை சில துறையினருக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு வந்ததாக முதல்வரே சொல்லிவிட்டார். ஆனால் எதிர்ப்பு வந்ததால் சட்டத்தைத் திரும்பப் பெற்றுவிட்டார். ஒரு சட்டத்தைக் கொண்டு வருவதற்கு எப்படித் துணிவு வேண்டுமோ அதைப்போல அதைத் திரும்பப் பெறுவதற்கும் துணிவு வேண்டும். 

 

கோவில்களில் ஆடு மாடு பலியிடுவதற்குத் தடை விதித்து ஜெயலலிதா சட்டம் கொண்டு வந்தார். மக்கள் கடுமையாக எதிர்த்தபோதும் பின்வாங்கவில்லை. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பிறகு பின்வாங்கினார். அவரைப் போல் இல்லை முதலமைச்சர் ஸ்டாலின். தங்களுடைய தொழிற்சங்கமே இந்த சட்டத்தை எதிர்த்ததை எண்ணி நான் பெருமையடைகிறேன் என்றார் முதல்வர். வேளாண் சட்டத்தை விவசாயிகளின் ஒரு வருடப் போராட்டத்திற்குப் பிறகு தான் பின்வாங்கியது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டின் முதலமைச்சர் அப்படிச் செய்யவில்லை. 

 

பாஜக எப்போதுமே சொல்வது ஒன்று செய்வது ஒன்று. இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று சொன்ன பாஜக, இன்று கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றால் இலவச பால், சிலிண்டர் வழங்குவோம் என்று அறிவித்துள்ளது. இவர்கள் சொல்வது எதையும் நம்ப முடியாது என்பது இதன் மூலம் தெரிகிறது. விலையுயர்ந்த கோட் அணியும் பிரதமர் தன்னை ஏழைத்தாயின் மகன் என்பார். கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் சூழ்நிலை தான் இன்று இருக்கிறது. பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி மீது கர்நாடக மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. அதனால்தான் அவர்கள் இலவசங்களை அறிவித்துள்ளனர்.

 

 

Next Story

“மோடி குட்டிக்கரணம் அடிச்சாலும் ஜெயிக்க முடியாது” -  ‘ஆம் ஆத்மி’ வசீகரன்

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

Vasigaran  Interview

 

பாஜக ஆட்சி குறித்து தன்னுடைய கருத்துக்களை நம்மோடு ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் கர்நாடகாவில் போட்டியிடும் வேட்பாளர் வசீகரன் பகிர்ந்துகொள்கிறார்.

 

அவர் கூறியதாவது “கர்நாடக மக்கள் தெளிவாக உள்ளனர். பாஜக ஆட்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் கர்நாடகம். குறுக்கு வழியின் மூலமாகவே கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்தது பாஜக. இந்த முர்றை அவர்களை கர்நாடக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மோடி என்ன குட்டிக்கரணம் போட்டாலும் பாஜக வெல்ல முடியாது. எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதில் பாஜக ஆர்வமாக உள்ளது. அனைத்துமே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். டெல்லியில் நாங்கள் ஆட்சி செய்வது பாஜகவின் கண்ணை உறுத்துகிறது. 

 

இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குபவர்களுக்கு உயர் பதவி அளிப்பது இவர்களுடைய வழக்கம். அந்த வகையில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதிக்கும் பதவி உயர்வு வழங்கியுள்ளனர். வெட்கமே இல்லாத அரசாங்கம் பாஜக அரசாங்கம். அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். மானங்கெட்ட கட்சி பாஜக. பாஜக செய்யும் மத அரசியல், சாதி அரசியலை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். தமிழ்நாடு ஆளுநர் அவருடைய வேலையை மட்டும் செய்ய வேண்டும். அவருடைய பேச்சுக்களை இனி மக்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

 

இந்த ஆளுநர் தமிழ்நாட்டுக்கு எதிரானவர். அரசுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் எதிரானவராக இவர் இருக்கிறார். இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. இந்த நிலைமை நீடித்தால் மக்களால் அடித்து விரட்டப்படுவார் ஆளுநர். ஆட்சியை எல்லாம் யாராலும் கலைக்க முடியாது. அதிமுகவின் ஜெயக்குமார் ஏதாவது பேச வேண்டும் என்று பேசுகிறார். திமுகவை குறை சொல்ல அதிமுகவுக்கு எந்தத் தகுதியும் இல்லை. குஜராத்தில் ஒவ்வொரு வருடமும் பல பெண்கள் கடத்தப்படுகிறார்கள் என்கிற தகவல் வந்துள்ளது. அப்படியென்றால் முதலில் கலைக்கப்பட வேண்டியது குஜராத் பாஜக அரசுதான். 

 

மக்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத இடமாக குஜராத் இருக்கிறது. மோடியையும் பாஜக கூட்டத்தையும் முதலில் அப்புறப்படுத்த வேண்டும். அவர்களால் இன்று நாட்டுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. ஜனநாயக விரோத செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அனைத்தையும் விட இன்று முக்கியமானது பாஜகவை வீழ்த்துவது தான். எனவே வரும் தேர்தலில் அவர்கள் வீழ்த்தப்படுவார்கள். வரும் 2024 தேர்தலில் ஒரு நல்ல ஆரோக்கியமான முடிவை ஆம் ஆத்மி எடுக்கும்.”