Skip to main content

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விருந்தில் காலிஸ்தான் தீவிரவாதியா?

Published on 22/02/2018 | Edited on 22/02/2018

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொள்ள இருக்கும் இரவு விருந்தில் காலிஸ்தான் தீவிரவாதி ஜஸ்பால் அத்வலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சீக்கியர்களுக்கான தனிநாடு அல்லது காலிஸ்தான் கோரும் அமைப்பும், கனடாவில் தீவிரவாத அமைப்பு என்று அறிவிக்கப்பட்டதுமான சர்வதேச சீக்கிய இளைஞர் படையைச் சேர்ந்தவர் ஜஸ்பால் அத்வல். கடந்த 1987ஆம் ஆண்டு இவர் உட்பட நான்கு பேர் மல்கியத் சிங் சித்து என்பவரைக் கொல்ல முயற்சி செய்தனர். 

 

Justin

 

மல்கியத் சிங் சித்து அகாலி தளம் கட்சியின் தலைவராகவும், பஞ்சாப் மாநில அமைச்சராகவும் இருந்தவர். இந்தக் கொலைமுயற்சியில் ஐந்து முறை சுடப்பட்டும் அவர் உயிர்தப்பினார். இந்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றும், கனடாவின் உளவாளி அமைப்பு வழங்கிய சாட்சியங்களால் இந்த நால்வரும் தண்டனை அனுபவிக்காமல் விடுவிக்கப்பட்டனர்.

 

தற்போது, தொழிலதிபராக இருக்கும் ஜஸ்பால் அத்வலுக்கு கனடா பிரதமர் டெல்லியில் கலந்துகொள்ள இருக்கும் இரவு விருந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக டொரோண்டோ சன் மற்றும் நேஷனல் போஸ்ட் ஆகிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 

Justin

 

சன் பத்திரிகையில், இந்தியா வந்திருக்கும் கனடா பிரிதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி மற்றும் ஜஸ்பால் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் இரவு விருந்தில் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழ் உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளன.

 

கனடாவின் பிரதமர் அலுவலகம் ஜஸ்பால் அத்வலுக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழைத் திரும்பப் பெறுவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக அறிவித்துள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் ஜஸ்பாலுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பிதழை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ஜனவரி 11ஆம் தேதி இந்தியாவிற்கு வந்ததாகவும், எந்தவிதமான அரசியல் நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை என்றும் ஜஸ்பால் நேஷனல் போஸ்ட் பத்திரிகைக்கு பதிலளித்துள்ளார். ஆனால், சன் பத்திரிகை இந்த அழைப்பை ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளது. 

 

இதுவரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைப் பற்றி பிரதமர் மோடி வாய் திறக்காமல் இருப்பதற்கு காலிஸ்தான் விவகாரம் ஒரு காரணமாக இருக்கலாம் என சொல்லப்பட்டு வரும் நிலையில், இந்த செய்தி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Priyanka Gandhi hits back at Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

 Priyanka Gandhi hits back at Prime Minister Modi

இந்நிலையில் தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து உங்கள் தாலியையும் தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். மங்கள சூத்திரத்தின் முக்கியத்துவத்தை மோடி புரிந்துகொண்டிருந்தால் இதுபோன்ற விஷயங்களை அவர் கூறியிருக்கமாட்டார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது உங்கள் தங்கமான மங்களசூத்திரத்தை யாராவது பறித்துச் சென்றார்களா?.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய மங்களசூத்திரங்களை அடமானம் வைக்க நேரிட்டபோது பிரதமர் எங்கே இருந்தார்?. விவசாயிகள் போராட்டத்தின் போது சுமார் 600 விவசாயிகள் வீரமரணம் அடைந்தபோது, அவர்களின் விதவைகளின் மங்களசூத்திரங்களைப் பற்றி அவர் நினைத்தாரா?. நாடு போரில் ஈடுபட்ட போது, எனது பாட்டி இந்திரா காந்தி தனது மங்களசூத்திரம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கினார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலைப்பட்டாரா?. என் அம்மா தனது தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார். இது போன்று இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் மங்களசூத்திரத்தை தியாகம் செய்தனர்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

அதே சமயம் கடந்த 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய - சீனப் போரின்போது இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படம் என ஒன்றை சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர். அதில், “மக்களின் சொத்துகளை காங்கிரஸ் கைக்கொள்ளும் என்று மோடி விமர்சிக்கிறார். ஆனால் நிஜத்தில் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுக்காக தங்கள் சொத்துகளை வழங்கியவர்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.