Skip to main content

இரண்டு பெண்களை மணந்த பெண் - என்ன கொடுமை ஸார் இது?!

Published on 16/02/2018 | Edited on 20/02/2018

முகநூல் வழியாக எத்தனையோ கூத்துகள் அரங்கேறுகின்றன. இதுவரை ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் மோசடி செய்த புகார்களைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஒரு பெண்ணே ஆண் வேஷம் போட்டு இரண்டு பெண்களை திருமணம் செய்த கூத்து உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

 

31 வயதான அந்தப் பெண்ணின் பெயர் ஸ்வீட்டி சென். ஆனால், கிருஷ்ணன் சென் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு, முகநூல் கணக்கைத் தொடங்கினார். தனது முகநூல் பக்கத்தின் வழியாக பல பெண்களுடன் ஆணைப் போலவே சாட்டிங் செய்திருக்கிறார். 2013 ஆம் ஆண்டு முதல் முகநூலில் இயங்கிய இவர், தன்னை பெரிய தொழிலதிபரின் மகன் என்று அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

 

Lady

 

இதில் மயங்கிய நைனிடாலைச் சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். அந்தப் பெண்ணின் குடும்பத்திடம் இருந்து எட்டரை லட்சம் ரூபாய் அளவுக்கு பணம் பெற்றுள்ளார். அவளிடம் பணம் பெற முடியாத சமயத்தில் இன்னொரு பெண்ணையும் ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறாள்.  ஒருகட்டத்தில் தனது கணவன் ஆணல்ல என்பதை இரண்டாவது பெண் கண்டுபிடித்துவிட்டாள். ஆனால், தனது ரகசியத்தை வெளியிடாமல் இருந்தால், நிறைய பணம் பெற்றுத் தருவதாக கூறியிருக்கிறாள் ஸ்வீட்டி சென். இதையடுத்து அவள் மவுனமானாள்.

 

இந்நிலையில்தான், ஸ்வீட்டி மீது வரதட்சனைக் கொடுமை புகாரை முதல் மனைவி கொடுத்திருக்கிறார். இந்த புகாரின்பேரில் விசாரணை நடத்தியபோது ஸ்வீட்டியிடம் மேலும் 200 பெண்களின் போன் நம்பர்கள் இருந்துள்ளன. போலீஸ் விசாரணையில், ஸ்வீட்டியே தன்னை ஒரு பெண் என்று கூறியபிறகுதான் போலீசுக்கே உண்மை தெரிந்தது.

 

சின்ன வயதிலிருந்தே ஆணைப்போலவே உடையணிந்து பழகிய ஸ்வீட்டி சென், தனது மனைவிகளுடன் செயற்கை உறுப்பு சாதனங்களை பயன்படுத்தி காலத்தை ஓட்டியிருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

 

2014 ஆம் ஆண்டிலிருந்து ஒரு பெண்ணுடன்தான் வாழ்கிறோம் என்று தெரியாமல் ஒரு பெண் வாழ்ந்திருக்கிறாள் என்பதுதான் இந்த வழக்கில் மிகவும் சுவாரசியமானது.

சார்ந்த செய்திகள்

Next Story

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்; ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கோடி இழப்பா? 

Published on 06/03/2024 | Edited on 07/03/2024
Too much loss per hour for Block Facebook, Instagram

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, மார்க் ஜுக்கர்பெர்க் என்பவர் தொடங்கிய நிறுவனம் ஃபேஸ்புக். உலகம் முழுவதும் உள்ள இணைய பயனர்களுக்கு தங்களது கருத்துகள் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் முன்னிலையில் உள்ளது. தற்போது, மார்க் ஜுக்கர்பெக் மெட்டா எனும் நிறுவனத்தைத் தொடங்கி அதன் கீழ் ஃபேஸ்புக் மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறார்.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள், திடீரென்று உலகம் முழுவதும் நேற்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்தனர். இதனையடுத்து, தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன. 

இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் 1 மணி நேரம் முடங்கியதால் அமெரிக்க பங்குச் சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் 23,127 கோடி இழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் நேற்று (05-03-24) வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலில், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் இருந்தார். இதற்கிடையே, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று 1 மணி நேரம் முடங்கியதால், மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் $2.79 பில்லியன் டாலர் குறைந்து தற்போது $176 பில்லியனாக உள்ளது. இருப்பினும், உலகின் நான்காவது பணக்காரர் என்ற நிலையை மார்க் ஜுக்கர்பெர்க் தக்க வைத்துள்ளார். 

Next Story

பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம்!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Facebook, Instagram shocked the users

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் முடங்கியுள்ளன.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் இன்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், தற்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயல்படத் தொடங்கியது.