Skip to main content

மோடி என்ற பெயருக்கு அர்த்தம் தெரியுமா? புதிய விளக்கம் தந்த ராகுல்காந்தி!

Published on 18/03/2018 | Edited on 18/03/2018

மோடி என்ற பெயருக்கு புதிய விளக்கம் தந்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.

 

காங்கிரஸ் கட்சியின் 84ஆவது தேசிய மாநாடு டெல்லியில் வைத்து நடைபெற்று வருகிறது. மாநாட்டின் இறுதி நாளான இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பேசிவருகின்றனர். காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் மாநாடு என்பதால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

 

இந்த மாநாட்டில் ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும், வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படுள்ளன. இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் உரையில் முழுக்கமுழுக்க பா.ஜ.க.வுக்கு எதிரான கருத்துகளையே தெரிவித்திருந்தார்.

 

‘இந்த நாட்டை பெரிதும் நேசிக்கும் இஸ்லாமியர்களை இந்தியாவிற்கு அந்நியமானவர்களே.. பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என பா.ஜ.க.வினர் சொல்கிறார்கள். தமிழர்களின் அழகிய மொழியான தமிழை மாற்றிக்கொள்ள நிர்பந்திக்கிறார்கள். வடகிழக்கு மக்களின் உணவு, உடை விவகாரங்களில் மூர்க்கமாக தலையிடுகிறார்கள்’ என ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

 

 

காங்கிரஸ் கட்சியின் முந்தைய கால பிழைகள் குறித்து பேசுகையில், ‘முந்தைய காலங்களில் நமது தலைமையில் அமைக்கப்பட்ட அரசு, மக்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யவில்லை. நாம் மக்களின் வாழ்க்கைச்சூழலை குறைத்துவிட்டோம் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக்கூறிய அவர், ‘நாம் காங்கிரஸை மாற்றவேண்டும். நமது தலைவர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையில் மிகப்பெரிய சுவர் இருக்கிறது. எனது முதல் திட்டமே அந்த சுவரை தகர்ப்பதுதான். நான் நம் தலைவர்களிடம் அந்தச் சுவரை அன்பினால் தகர்ப்பது குறித்து கலந்தாலோசிக்க இருக்கிறேன்’ எனவும் கூறினார்.

 

மேலும், ‘மோடி என்றால் உண்மையில் என்ன தெரியுமா? மிகப்பெரிய கொடூர முதலாளிகளுக்கும், இந்தியப் பிரதமருக்கும் இடையிலான கூட்டணியைத்தான் மோடி என்று அடையாளப்படுத்த முடியும். காங்கிரஸ் கட்சி நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கூட்டிச் செல்லும். ஆனால், நாம் மனிதர்களாயிற்றே.. தவறுகள் செய்ய நேரிடும். ஆனால், மோடி தன்னை மனிதன் என்று நினைக்காமல், கடவுளின் அவதாரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்’ என கிண்டலடிக்கும் விதமாக பேசினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.