Skip to main content

20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் - ரத்தக் கறையுடன் வீடியோ வெளியிட்ட நடிகர்

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
kannada actor Chetan Chandra seriously injured in mob attack

கன்னடத் திரையுலகில் பிரபலமாக வலம் வருபவர் சேத்தன் சந்திரா. இவர் தன்னை 20 பேர் சூழ்ந்து கொண்டு தாக்கியதாக அதிர்ச்சி சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரத்தக்கறையுடன் அவர் வீடியோவில் பேசியது, “அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒரு கோவிலுக்கு என் அம்மாவுடன் சென்றிருந்தேன். வீடு திரும்பும் போது குடிபோதையில் இருந்த ஒருவர் எனது காரை பின்தொடர்ந்து சேதப்படுத்த முயன்றார். அவரிடம் விசாரித்தபோது, அவருக்கு பின்னால் வந்த 20 பேர் என்னை தாக்கத் தொடங்கினர்.

இதனால் எனக்கு கடும் காயம் ஏற்பட்டது. அந்த கும்பல் எந்த இரக்கமும் இல்லாமல் என்னைத் தாக்கினார்கள். இது ஒரு பயங்கரமான அனுபவம். எனது கார் முற்றிலும் சேதமடைந்தது, போலீசார் எனக்கு முதலுதவி அளித்தனர். அடித்தவர்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் குடிபோதையில் இருந்தனர்” என்றார். இந்த சம்பவம் தொடர்பாக சேத்தன் சந்திரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கக்கலிபுரா காவல் அதிகாரிகள், தாக்கிய இரண்டு பேரை கைது செய்தனர். பின்பு காவல்துறை ஜாமீனில் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்